Best NSS Officer Award 2009-2010 - Ayya Nadar Janaki Ammal College - Mr.S.Ganesan |
24-02-2011 சிவகாசி பேராசிரியருக்கு சிறந்த என்.எஸ்.எஸ். அலுவலர் விருது சிவகாசி, பிப். 22: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலர் எஸ்.கணேசன் 2009-2010-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த என்.எஸ்.எஸ். அலுவலர் விருது பெற்றுள்ளார் என முதல்வர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது செய்திக் குறிப்பு: கல்லூரி என்.எஸ்.எஸ். மூலம் இலவச மருத்துவ முகாம்கள், கண்தான விழிப்புணர்வு முகாம்கள், ரத்த தான முகாம்கள் உள்பட பல்வேறு முகாம்கள் தனியாகவும், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக கணேசனுக்கு மாநில விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் மாநில அளவிலான சிறந்த என்.எஸ்.எஸ். அலுவலர் விருதை வழங்கியுள்ளார். இவரை கல்லூரித் தாளாளர் சுபாஷ்சந்திரபோஸ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர். |