SIVAKASI WEATHER
Training for fireworks employers

24-02-2011
பட்டாசுத் தொழிலாளர்க்கு பாதுகாப்பு பயிற்சி

சிவகாசி, பிப். 23: தொழிற்சாலை ஆய்வகத் துறை சார்பில் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு பயிற்சிமுகாம் நடைபெற்றது.

தொழிற்சாலை ஆய்வகத் துறை துணைத் தலைமை ஆய்வாளர் (பயிற்சி) போஸ் தலைமை வகித்தார். தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் வி. பெரியசாமி முகாமில் பேசியதாவது: தற்போது விண்ணில் சென்று ஒளி சிந்தும் பட்டாசு ரகங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அந்த ரகப் பட்டாசில் உள்ள வேதியியல் பொருள்களின் தன்மையை தொழிலாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பட்டாசு ஆலையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. கண்காணிப்பாளர் கூறுவதை அலட்சியப்படுத்தக் கூடாது.

மருந்து அடைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கவனம் சிதறக்கூடாது.

ஆலைக்கு வரும்போது பிரச்சனைகளுடன் வரக்கூடாது என்றார். நிகழ்ச்சியில், தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன&

News & Events
top