SIVAKASI WEATHER
சிவகாசி கல்லூரி உதவிப் ப

05-03-2011
சிவகாசி கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆய்வுக்கு நிதி உதவி

சிவகாசி, மார்ச் 4: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சோ.முத்தமிழ்செல்வன் ஆய்வுக்கு பல்கலைக்கழக நல்கை குழுவின் நிதி உதவி கிடைத்துள்ளது என கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்தி குறிப்பு:

தென்மாவட்ட ஊர்ப் பெயராய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்ய நிதி உதவி வேண்டும் என அவர் பல்கலைக்கழக நல்கைக் குழுவிற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இதை ஏற்று அவரது ஆய்வுக்கு ரூ.5,61,200 வழங்கப்பட்டுள்ளது.

இவர் தனது ஆய்வுக்காக விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்வார் எனத் தெரிவித்துள்ளார்.

News & Events
top