Sri Kaliswari College - Women-s Day Celebration 2011 |
12-03-2011 காளீஸ்வரி கல்லூரியில் மகளிர் தின விழா சிவகாசி, மார்ச் 11: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.கண்மணி தலைமை வகித்தார். மாணவி எம்.துர்காதேவி வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியை பொ.ந.கமலா, பெண்கள் பிரச்னைகளுக்கான விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேசியதாவது: நமது சமூக அமைப்பு ஆண்களை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. இதனால் பெண்கள் இயல்பாகவே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந் நிலை, மாறுவதற்கு பெண்கள் கல்விகற்று முன்னேற வேண்டும். கல்வி கற்பதன் மூலம் பெண் அடிமைத்தனத்தை ஒழித்துவிடலாம். வரதட்சிணைக் கொடுமை காரணமாகப் பல பெண்கள் தற்கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் தொழில் முனைவோராக உருவாகி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலர் எம்.தேவிகாமாட்சி செய்திருந்தார். |