SIVAKASI WEATHER
Insurance Policy 2011

19-03-2011
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசி சேகரிப்பு முகாம்

சிவகாசி, மார்ச் 18: சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி சேகரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

கிராம பொதுமக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது இந்தத் திட்டம். குறைந்த பிரிமியம், அதிக போனஸ், குறைந்தபட்ச வரம்பு ரூபாய் பத்தாயிரம் முதல் அதிக பட்சம் ரூ. 3 லட்சம் வரையாகும். குறித்த கால முழு ஆயுள் போன்ற திட்டங்கள் தவிர, குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கான எதிர்பார்ப்புக் காப்பீடு (15 முதல் 20ஆண்டுகள்) மற்றும் 10 வருட அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களும் உண்டு. பாலிசிதாரர் வயது வரம்பு 19 முதல் 55 வரை. தேவையெனில், பிரிமியம் செலுத்தும் அஞ்சலகத்தை மாற்ற அனுமதியுண்டு.

இந்த திட்ட முகாமுக்கு முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளர் என்.நிரஞ்சலாதேவி தலைமை வகித்தார்.

சிவகாசி உதவிக் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் உ

News & Events
top