MDMK vs. ADMK - Election 2011 |
22-03-2011 அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ம.தி.மு.க. முடிவு சிவகாசி, மார்ச் 21: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் 21 இடங்களை ஒதுக்குமாறு ம.தி.மு.க. கேட்டது. ஆனால் 7, 8, 12 இடங்கள்தான் வழங்க முடியும் என அ.தி.மு.க. கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந் நிலையில், ம.தி.மு.க. உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டது. இந் நிலையில், சிவகாசியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகி ஒருவரின் வீட்டில் அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இதில் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக உளவுத் துறை போலீஸรดர் கூறினர். |