Election 2011 - ADMK Meet |
29-03-2011 அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகாசி, மார்ச் 27: சிவகாசியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் என்.டி.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், பாலகங்காதரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டத் தலைவர் ராமராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அமீர்கான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், இந்தியக் குடிரசு கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் அழகிரிசாமி, மாவட்டக் கவுன்சிலர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ஜெயலலிதாவிற்கும் க |