Gurunathan - Symbol Television Sivakasi Assembly constituency - Election 2011 |
08-04-2011 சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் சிவகாசி, ஏப். 6: சிவகாசி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், தனது வீட்டிலேயே மைக் செட் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரான ச. குருநாதன் (66) என்பவர், சிவகாசி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவரது சின்னம் தொலைக்காட்சிப் பெட்டி. திருத்தங்கல் பாண்டியன் நகரில் இவர் வசிக்கிறார். இவர் தனது வீட்டில், போலீஸ் அனுமதி பெற்று மைக் செட் அமைத்து காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், இரவில் 9.30 மணி முதல் 9.45 மணி வரையிலும் பிரசாரம் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், காலையில் வாக்காளர்கள் வேலைக்குச் செல்லும் முன் ஒருமணி நேரம் பிரசாரம் செய்கிறேன். இரவில் பணிமுடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு வந்தவுடன் மைக்கில் பேசி பிரசாரம் செய்கிறேன். இது நல்ல பலனைக் கொடுக்கும் என நம்புகிறேன் என்றார். |