SIVAKASI WEATHER
Eye donation awareness day in Sivakasi

20-05-2011
சிவகாசியில் கண் தான விழிப்புணர்வு நாள் விழா

சிவகாசி, மே 18: சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில், கண் தான விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.

25 அரிமா சங்கங்களின் சார்பில் 2010 மற்றும் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 502 ஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதற்கான பாராட்டு விழாவுக்கு, கண் தான மாவட்டத் தலைவர் ஜே. கணேஷ் தலைமை வகித்தார்.

பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ராஜேஸ் வரவேற்றார். கண் தானம் பெற உதவி புரிந்துள்ள அரிமா சங்க நிர்வாகிகளை, சங்க மாவட்ட ஆளுநர் பி.ஓ.பி. ராமசாமி பாராட்டி பரிசு வழங்கினார்.

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் 128 ஜோடி கண்களை தானமாகப் பெற்று முதலிடம் வகிக்கிறது. இதை, சங்க ஆளுநர் பாராட்டினார்.

சேவைத் திட்டமாக, பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம், கல்வி உதவித் தொகை, பள்ளிச் சீருடை, இருதய அறுவை சிகிச்சைக்கு உதவித் தொகை ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ஆளுநர் (தேர்வு) கே.எஸ். மணி, முதல் நிலை துணை ஆளுநர் பி.ஜே.எம். யேசு&#

News & Events
top