SIVAKASI WEATHER
SSLC 100 percent - School for Deaf and Dumb

28-05-2011
செவித் திறன் குறையுடையோர் பள்ளியில் 100 சதம் தேர்ச்சி

சிவகாசி, மே 27: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகாசியில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் மேல்நிலைப் பள்ளி நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இது குறித்து அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் கூறியதாவது:

செவித்திறன் குறையுடையோருக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆகிய நான்கு பாடங்கள் மட்டுமே உள்ளன. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவி எம்.கார்தீஸ்வரி 400-க்கு 328 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர் என்றார்.

News & Events
top