சில்லரை வர்த்தகத்தில் அ& |
01-06-2011 சில்லரை வர்த்தகத்தில் அந்நியர் வருகையை எதிர்த்துப் பிரசாரம் சிவகாசி, மே 30: சில்லரை வர்த்தகத்தில் அந்நியர் வருகையை எதிர்த்து சிவகாசியில் பிரசாரம் நடைபெற்றது. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு, உள்நாட்டில் உள்ள சிறிய நிறுவனங்களை நலிவடையச் செய்துவிடும் அபாயம் உள்ளது. நாடு முழுவதும் 1.25 கோடி கடைகள் உள்ளன. 2.5 கோடி நடைபாதை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இதன் வர்த்தக மதிப்பு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடியாகும். இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 சதமாகும். இதில் உணவுப் பொருள் வர்த்தகத்தில் மட்டும் 70 சதம் உள்ளது. இதில் நான்கு கோடி குடும்பங்களின் எதிர்காலமும், சுமார் 20 கோடி மக்களின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது. நமது நாட்டில் 4 சதவிகித கடைகளே 500 சதுர அடிக்கும் மேலாக இயங்குகின்றன. ஆனால், அமெரிக்காவின் வால |