Training for police |
09-07-2011 விசாரணைக் கருவிகளை கையாளும் பயிற்சி சிவகாசி, ஜூலை 7: சிவகாசி காவல் கோட்டத்துக்கு, தமிழக அரசு புலன் விசாரணைக் கருவிகளை வழங்கியுள்ளது. குற்றம் நடைபெற்ற இடத்திலும், காவல்நிலையத்திலும் புலன் விசாரணை செய்வதற்காக அரசால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு நவீன கருவிகளை கையாளுவது குறித்து, காவல் கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமணன், நகர் காவல்நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். |