SIVAKASI WEATHER
சிவகாசி ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அமைக்கக் கோரிக்கை

07-07-2018
சிவகாசி ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் சிவகாசி ரயில் நிலையத்திற்கு தினசரி மூன்று முறை வருகிறது. இதில் தினசரி ஆயிரகணக்காணோர் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கு பயணச்சீட்டு வழங்க ரயில் நிலையத்தில் ஒரு கவுன்டர் மட்டுமே உள்ளது. இதனால் ரயில் வரும் நேரத்தில் வரும் பயணிகள் பதைபதைப்புடன் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணச்சீட்டு வாங்குவதற்கு பயணிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்க, ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் நிறுவப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


News & Events
top