SIVAKASI WEATHER
Ayya Nadar Janaki Ammal College - Workshop 2011

08-02-2011
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

சிவகாசி, பிப். 7: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நுண்ணுயிரியல், மரபியல் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நொதிகள் மற்றும் படிவங்களின் வளர்ச்சி குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் அழகர், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பி.பிரபு, இயற்பியல் துறைப் பேராசிரியர் சுந்தரேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் மாணவர்கள் நொதிகளின் மாறுபட்ட போக்கினை அளவு செய்தனர். நொதிகளின் திறன்பாடு வெம்பம், வினைபொருள் மற்றும் சுற்றுப்புறக் காரணிகளால் மாறுபடும்போது மேலும் நானோ பொருள்களை அளவிடும் முறை செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

News & Events
top