SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு தொற்று பரிசோதனை

08-08-2020
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு தொற்று பரிசோதனை

சிவகாசி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சிப் பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் இயங்கும் பட்டாசு ஆலைகளில் தொற்று பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இன்று காளீஸ்வரி பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. உடல் வெப்பநிலை கண்டறிதல், ரத்த அழுத்தம், சுவாசப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொற்றுப்பரிசோதனை ஏற்பாடுகளை சிவகாசி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


News & Events
top