SIVAKASI WEATHER
MEPCO Schlenk Engineering College - Seminar 2011

09-02-2011
பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி, பிப். 8: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கணிதத் துறை மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் ஜோ.தீபலட்சுமி வரவேற்றார். முனைவர் பா.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். ஆய்வுக் கட்டுரையை 7 பேர் சமர்ப்பித்தனர்.

முனைவர் எஸ்.வேலம்மாள் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

News & Events
top