SIVAKASI WEATHER
Eye donation awareness programme 2011

14-02-2011
கண் தான விழிப்புணர்வு முகாம்

சிவகாசி, பிப். 13: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து எஸ்.ராமச்சந்திராபுரத்தில் கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் டி.லலிதா வரவேற்றார். மாவட்ட கண் தானத் தலைவர் ஜெ.கணேஷ், கண் தானத்தின் அவசியம், நன்மைகள் குறித்துப் பேசினார்.

கண் தானம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. கண் தான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள், ஸ்டிக்கர் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன.

கண் தானம் குறித்த கேள்விகளுக்கு சரியாகப் பதில் கூறியவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ஆர்.ராஜேஷ், துணைத் தலைவர் ஜி.ராமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்ட அலுவலர் கே.உமா நன்றி கூறினார்.

News & Events
top