SIVAKASI WEATHER
சிவகாசி, ராஜபாளையம் ஊராட

15-02-2011
சிவகாசி, பிப். 14: கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அலுவலர்கள் யாரும் வராததால் சிவகாசி, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 8 முதல் 10-ம் தேதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

இதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம் நடைபெறும் என ஊரக வளர்ச்சி சங்கத்தினர் அறிவித்தனர்.

இதன்படி தற்போது ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் திங்கள்கிழமை அலுவலகம் மூடப்பட்டது.

ராஜபாளையம்: பிப். 8 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் கோரிக்கைகளை வல

News & Events
top