Unannounced power cuts hurt printing industry - Sivakasi |
21-02-2011 அறிவிக்கப்படாத மின்வெட்டு: சிவகாசியில் அச்சுத் தொழில் பாதிப்பு சிவகாசி, பிப். 18: சிவகாசியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டுள்ளதால், அச்சுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் இரண்டு மணி நேரமாக இருந்துவந்த மின்வெட்டு தற்போது மூன்று மணி நேரமாக அதிகரித்துள்ளது. இதுதவிர, தினசரி பல சமயங்களில் மின்தடை எற்படுகிறது. சிவகாசியில் உள்ள அச்சகங்களில் 2011-2012 கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரி நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வர உள்ளதால், பள்ளி நோட்டுப் புத்தகம் தயாரிக்கும் பணியை விரைந்து முடிக்க அச்சக அதிபர்கள் திட்டமிட்டிருந்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டால், கட்சிகளுக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடும் பணி நடைபெறும். ஆனால், எப்போது மின்தடை ஏற்படும் என கூற முடியாத நிலை உள்ளதால், குறிப்பட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு |