Sivakasi - Water Supply |
28-02-2011 சீரான குடிநீர் விநியோகம்: ரூ.35 கோடி வழங்கக் கோரிக்கை சிவகாசி, பிப். 27: சிவகாசி நகராட்சிப் பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 35.24 கோடி வழங்கக் கோரி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என சிவகாசி நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பு: சிவகாசி நகராட்சிப் பகுதிக்கு வெம்பக்கோட்டை குடிநீர் நிலையத்திலிருந்தும், மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்தும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெம்பக்கோட்டை தலைமை குடிநீர் நிலையத்தில் உள்ள மோட்டார், மின் மோட்டார் மற்றும் ஜெனரேட்டர்கள், சுத்திகரிப்பு நிலையம், மின் இணைப்பு சாதனங்கள், வால்வுகள் மற்றும் மோட்டார் அறைகள், அங்குள்ள அலுவலர்கள் குடியிருப்பு மராமத்துப் பணிக்கு ரூ. 2.34 கோடி, தலைமை குடிநீர் நிலையத்திலிருந்து பம்பிங் மெயினுக்கு வரும் ஏ.சி. பைப்புகளை டி.ஐ. பைப்புக்களாக |