SIVAKASI WEATHER
சிவகாசியில் கரும்பு, மஞ்சள்குலை விற்பனை ஜோர்

12-01-2021
நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை : சிவகாசியில் கரும்பு, மஞ்சள்குலை விற்பனை ஜோர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் மஞ்சள்குலை, பனங்கிழங்கு, செங்கரும்பு, மஞ்சள், வண்ணக் கோலப்பொடிகள் விற்பனை களைகட்டியுள்ளது. காய்கறி வரத்து அதிகரித்தாலும் முருங்கை, கத்தரிக்காய் விலை உச்சம் பெற்று வருகின்றன. தைப்பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் (14ம் தேதி) உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் புது பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். இதற்காக தென்மாவட்டங்களில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. இந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு சிவகாசியில் விடாது மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் சிவகாசி மக்கள் தங்கள் தேவைக்குரிய பொங்கல் பொருட்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.


News & Events
top