SIVAKASI WEATHER
சிவகாசி அக்கா தம்பி

23-05-2021
சிவகாசியில் உண்டியல்களில் சேமித்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அக்கா தம்பி

சிவகாசி தேவி நகரில் வசிப்பவர் ஓட்டல் தொழிலாளி ராம்குமார் இவரது மனைவி ராம சித்ரா லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார் இவர்களுக்கு நான்காம் வகுப்பு பயிலும் சஸ்மிதா வயது 10 என்ற மகளும் இரண்டாம் வகுப்பு படித்து வரும் கர்ணித் வயது 8 என்ற மகனும் உள்ளனர்.. கொரானா தொற்றுநோய் தொடங்கியது முதல் கடந்த வருடத்திலிருந்து சஸ்மிதாவுக்கு செல்போன் மூலமாக ஆன்லைன் வகுப்பு நடந்து வரும் நிலையில் தனது தாயார் ராமசித்ராவின் செல்போன் மூலமாக ஆன்லைனில் கல்வி பயின்று வந்தார் இதன் காரணமாக தங்களுக்கென்று ஒரு செல்போன் வாங்க முடிவு செய்த அக்காவும் தம்பியும் தனது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் அன்றாடம் வழங்கும் பணத்தையும் நாணயங்களையும் ஆளுக்கு ஒரு மண்பானை உண்டியல் வாங்கி அதனை கடந்த ஓராண்டாக உண்டியலில் போட்டு சேமித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இவர்களை நாமும் பாராட்டலாமே!


News & Events
top