SIVAKASI WEATHER
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள்

10-09-2023
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள்

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள் இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளலார் இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் குழந்தைகளுக்கு யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் சதுரங்க போட்டி, இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதையடுத்து துறையின் விரிவாக்க பணி சார்பில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களான பேனா, பென் சில் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியை குருமகேஸ்வரி, சுற் றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியை அபிநயா ஆகியோர் செய்திருந்தனர்.


News & Events
top