SIVAKASI WEATHER
சிவகாசி நான்கு ரத வீதிகளில் ரோடு சீரமைப்பு

29-10-2023
சிவகாசி நான்கு ரத வீதிகளில் ரோடு சீரமைப்பு

சிவகாசி ரத வீதிகளில் பல கோயில்கள் உள்ளன. இப்பகுதி சிவகாசியில் முக்கிய பஜாராகவும் உள்ளது. இதனால் இப்பகுதியை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். மேலும் நகரில் எந்தப் பகுதிக்கு செல்வதாக இருந்தாலும் ரத வீதிகளை கடந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் நான்கு ரத வீதிகளிலுமே கடந்த ஆண்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக ஆங்காங்கே ரோடு தோண்டப்பட்டது. இதனால் ரோடு சேதம் அடைந்திந்தது.. ரத வீதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிவடையாததால் ரோடு சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டட் ப்பணிகள் முடிவடைந்தந் தால் குடிநீர் வடிகால் வாரியத்தித்னர் ரோடுகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் புதிய ரோடு போடுவதற்காக மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் பழைய ரோடு தோண்டப்பட்டது. ஆனால் அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை.
இதனால் ரத வீதிகளை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தற்போது நான்கு ரத வீதிகளிலும் ரோடு போடப்பட்டட் து. இதனால் சிவகாசி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.


News & Events
top