SIVAKASI WEATHER
சிவகாசி நடிகர் பசி நாராயணன்

08-01-2024
சிவகாசியை சேர்ந்த நடிகர் பசி நாராயணனை பற்றிய சுவாரசிய தகவல்

தமிழ்த்திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் விட்ட நல்ல நடிகர்களில் ஒருவர் "பசி நாராயணன்" இவர் பல முன்னணி நடிகர்களோடு 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருத்துள்ளார். இவர் நாடகத்திலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர்.

சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர், ஆர்.எஸ்.மனோகரின் நாடகங்களில் பலவற்றில் நடித்தவர். இவர் நடிப்புடன் திரைக்கதை அமைப்பது, கதை எழுதுவது, நடனம் அமைப்பது போன்ற பல கலைகளிலும் வல்லவர். இவர் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல், பாண்டியராஜன், கார்த்திக், சசரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். கவுண்ட மணியோடும் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார்.

இயக்குநர் துரை அவர்களின் "பசி" படத்தில் இவர் ஏற்றிருந்த "சவுண்ட் கன்னையா" பாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து, அவர் பெயருடன் இறுதி வரை ஒட்டிக்கொண்டது.

கன்னிராசி" படத்தில் இவர் ஜனகராஜுக்கு போலி ஜாதகம் கணிக்க கூலியாக, நூறு ரூபாயில் இருந்து ஆரம்பித்து ஐந்து ரூபாயில் முடிக்கும் காமெடி காட்சியை இன்றும் மறக்கமுடியாது...!
.நான் மகான் அல்ல, ஆணிவேர், அக்கரை பச்சை, சிவா, ஆனந்த கும்மி, போன்றவை இவர் நடித்த சில படங்கள். பன்முகத்திறன் கொண்ட இவர் 1998 ம் வருடம் உடுமலைபேட்டையில் இருதய நோய் காரணமாக காலமானார். மனைவி - மூன்று மக்கள் உடைய குடும்பம் இவருடையது.


News & Events
top