சிவகாசியில் போலியோ சொட்டு மருந்து முகாம்! |
03-03-2024 சிவகாசியில் போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு , போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் , நாளை 03/03/24 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் , ஒவ்வொரு பகுதிகளிலும் தங்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்கள் , பேருந்து நிலையங்கள் , ரயில் நிலையங்கள் , என அனைத்து இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது. இன்றைய தினம் நமது சிவகாசியின் மாநகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமது வணக்கத்திற்குரிய மேயர் திருமதி,சங்கீதா இன்பம் அவர்கள்குழந்தைகளுக்கு உண்டான போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு ஊற்றி துவக்கி வைத்தார்கள், துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா காளிராஜன் அவர்கள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு. அசோகன் அவர்கள் மாநகராட்சியின் ஆணையாளர் திரு. ப. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் ,சுகாதார ஊழியர்கள் சுகாதார அலுவலர்கள் போலியோ சொட்டு மருந்து ஊற்றும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் வீட்டு குழந்தைகளை அழைத்துச் சென்று சொட்டு மருந்து பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன் பெறவும். |