SIVAKASI WEATHER
சிவகாசியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

30-06-2024
சிவகாசியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிவகாசி தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ₹5 ரூபாய் பாடசாலை, சிவகாசி Yi மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. மக்களின் இயல்பான வாழ்க்கையை அழித்து உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளை முற்றிலும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திரு. ஃபெரோஸ் கான் அப்துல்லா, துணை ஆட்சியர் திருமதி பிரியா ரவிச்சந்திரன் அவர்களும், துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு சுப்பையா அவர்களும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களும், ₹5 ரூபாய் பாடசாலையின் ஆலோசகர் திரு.சந்திர ராஜன் அவர்களும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலை 10:15 மணி முதல் 11:30 மணி வரை காவலர்களும், மாணவர்களும் பேரணியாக நடந்து சென்றனர். இப்பேரணி சிவகாசி சாரிடிஸ் மண்டபத்தில் தொடங்கி சிவகாசி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் சிவகாசியைச் சார்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, தி ஸ்டாண்டர்ட் ஃபயர் வொர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, பெல் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் பொதுமக்களும் என பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றியும், போதையின் தீமைகள் பற்றியும் தெருக்கூத்து கலைஞர்களால், பொது மக்களுக்கு நாடகமாக நடித்துக் காண்பிக்கப்பட்டது.


News & Events
top