SIVAKASI WEATHER
வேடந்தாங்கலாக மாறும் சிவகாசி கண்மாய்கள்

25-08-2024
வேடந்தாங்கலாக மாறும் சிவகாசி கண்மாய்கள்

சிவகாசியில் உள்ள சிறுகுளம் மற்றும் பெரியகுளம் கண்மாய்கள் பறவைகளின் வேடந்தாங்கலாக மாறி வருகிறது. சிவகாசி பசுமை இயக்கம் சாா்பில் சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவை தூா்வாரப்பட்டதுடன், நீா்வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட்டன. மேலும் பசுமை இயக்கமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து சிவகாசி மாநகராட்சி அருகே உள்ள பெரியகுளம் கண்மாய் உள்ளி ட்ட பல பகுதிகளி ல் அடா்வனத்தை (மியாவாக்கி காடு) உருவாக்கின. இங்கு நடப்பட்ட மரங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன. இந்நிலையில், அடா்வனப் பகுதியில் உள்ள மரங்களைத் தேடி வரும் பல்வேறு வகையான பறவைகள் இளைப்பாறிச் செல்கி ன்றன. அதிலும் சிறுகுளம் கண்மாயின் நடுவே உருவாக்கப்பட்ட அடா்வனத்தில் உள்ள மரங்களைத் தேடி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவை கள் பறந்து வருவதையும், பிறகு அவை இங்கிருந்து பறந்து செல்வதையும் பொது மக்கள் பாா்த்து ரசிக்கின்றனா்.


News & Events
top